Saturday, May 23, 2020

மோர் குழம்பு செய்யலாம் வாங்க....

Welcome To Kitchen Book

மோர் குழம்பு செய்யலாம் வாங்க....

தேவையானவை:

1. தயிர் - 300 கிராம் ( ஓரளவு புளித்தது
.)

2. தேங்காய் துருவல்- 1 கப்

3. மிளகாய்-3

4. காயப்பொடி - 1டேபிள் ஸ்பூன்

5. இஞ்சி - 1 துண்டு

6. சீரகம் , கடுகு , கறிவேப்பிலை,  உப்பு, எண்ணெய்

7. கடலை பருப்பு , பச்சரிசி-1 டேபிள் ஸ்பூன்

8. சின்ன வெங்காயம்-3


செய்முறை :

1. தயிரை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கடைந்து எடுக்க வேண்டும்.

2. கடலை பருப்பு,  பச்சரிசி 1மணி நேரம் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.

3. தேங்காய் துருவல்,  சீரகம், இஞ்சி, கடலை பருப்பு,  பச்சரிசி, சின்ன வெங்காயம்,  மிளகாய் ஆகியவை மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும்.

4. அரைத்த மசாலாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் சிம்மில் 5 நிமிடம் வைக்க வேண்டும் .

5. மசாலா பச்சை வாசனை போன பின் கடைந்த தயிர் சேர்க்க வேண்டும்.  தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.  காயப்பொடி சேர்க்கவும்.

இப்பொழுது சுவையான மோர் குழம்பு ரெடி....

** இதனுடன் வெண்டைக்காய் அல்லது வடகம் அல்லது வெள்ளை பூசணி சேர்க்கலாம்.

** வெண்டைக்காய் அல்லது வடகம் சேர்த்தால் அதை எண்ணெய் ல் பொரித்து கடைசியாக குழம்பில் சேர்க்கவும்.

** வெள்ளை பூசணி என்றால் சிறிய துண்டுகளாக வெட்டி வேக வைத்து கடைசியாக குழம்புடன் சேர்க்க வேண்டும்.

** பருப்பு வடை இருந்தால் அதையும் குழம்பில் சேர்க்கலாம்.

மேலும் இது போன்ற சமையல் குறிப்புகள் காண இங்கே கிளிக் செய்யவும். Click here



No comments:

Post a Comment